டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி - திருப்பூர் அணி அசத்தல்

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடைபெற்ற டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டியில் ஆந்திரா அணியை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி.


திருப்பூர்: 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் அணி, ஆந்திர அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது.

திருப்பூர் முருகம்பாளையம் வயர்ஸ் மல்டி ஸ்போர்ட்ஸ் பார்க்கில் திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான டி.எஸ்.சி சேலஞ்சர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டி கடந்த 14ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பூனே உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எட்டு அணிகள் கலந்து கொண்டன. டி.எஸ்.சி சேலஞ்சர் டிராபிக் கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் திருப்பூர் மற்றும் ஆந்திர அணி மோதின. இதில் முதலில் விளையாடிய ஆந்திரா அணி 133 ரன்கள் எடுத்தது.



134 என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் அணியினர் வெற்றி இலக்கை எட்டி போட்டியில் வெற்றி பெற்றனர்.



இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், இந்தியன் கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவில் உள்ள சரத் ஸ்ரீதர் , தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் பழனி உள்ளிட்டர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கும், கலந்து கொண்ட மற்ற அணியினருக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

Newsletter

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...