துடியலூர் அருகே சாலை வாரம் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

கோவை துடியலூர் அருகே சாலைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம், துடியலூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.


கோவை: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து, வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



கோவை துடியலூர் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம், துடியலூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து, வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.



இப்பேரணியை வி.ஜி.மருத்துவமனை மருத்துவர் நந்தினி வெங்கடேஷ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மனுநீதி, துடியலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் சாலைகளில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

பேரணியானது வி.ஜி.மருத்துவமனையில் தொடங்கி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பேருந்து நிறுத்தத்தை அடைந்து, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று முடித்தனர்.

அங்கு நெடுஞ்சாலைத்துறை கோட்டுப்பொறியாளர் மனுநீதி தலைமையில் டூவிலரில் ஹெல்மெட் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த பேரணியில் வி.ஜி.மருத்துவனை மனிதவள மேலாளர் பிரசாந்த், முதல்வர் ருக்குமணி, ஆசிரியர்கள், கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் தமிழ்செல்வன், துணை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வராஜ், ராஜேஷ், ஜீவா, துரைசாமி, உறுப்பினர்கள் பிரபாகரன், முத்துகுமாரசாமி, முருகதாஸ், சதாசிவம், ஆறுச்சாமி, செந்தில், வேலுசாமி, தர்மலிங்கம், டி.பி.ராஜேந்திரன், மோகன்ராஜ், சுந்தரசாமி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...