தபெதிக பொதுச்செயலாளர் மனைவி மறைவு - திமுக எம்பி, அமைச்சர் அஞ்சலி

தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தியின் உடலுக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஆ.ராசா எம்பி உள்ளிட்ட பலர் மலரஞ்சலி.


கோவை: கோவை காந்திபுரத்தில் வசித்து வந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனின் மனைவி வசந்தி இன்று காலமானார்.



அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி, அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

மேலும், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணைமேயர் வெற்றிச்செல்வன், பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி, பேரறிவாளன், அற்புதம்மாள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.



இதைத் தொடர்ந்து, காந்திபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்ப நாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் நடைபெற்றது.

இறுதி ஊர்வலத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...