கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

காந்திபுரம் பேருந்து நிலைய பொது கழிவறை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், புதிதாக கஞ்சா விற்பனையை தொடங்கிய இளைஞர் கைது.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சபரி (22) என்பது தெரியவந்தது. வெல்டிங் பணி செய்து வந்த இவர், கஞ்சா விற்பனையை தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...