கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

காந்திபுரம் பேருந்து நிலைய பொது கழிவறை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், புதிதாக கஞ்சா விற்பனையை தொடங்கிய இளைஞர் கைது.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சபரி (22) என்பது தெரியவந்தது. வெல்டிங் பணி செய்து வந்த இவர், கஞ்சா விற்பனையை தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...