கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

காந்திபுரம் பேருந்து நிலைய பொது கழிவறை அருகே இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், புதிதாக கஞ்சா விற்பனையை தொடங்கிய இளைஞர் கைது.


கோவை: கோவை மாவட்டம் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். இந்த சோதனையில் அவரிடம் சுமார் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற சபரி (22) என்பது தெரியவந்தது. வெல்டிங் பணி செய்து வந்த இவர், கஞ்சா விற்பனையை தொடங்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், இளைஞர்கள் இதுபோன்ற கஞ்சா விற்பனையில் சிக்கி தங்களது வாழ்க்கையை சீரழித்து கொள்ள வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...