கோவையில் கஞ்சா கும்பல் தலைவன் கைது - கூட்டாளிகள் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்த காரமடையை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் சந்திப்பு அடுத்த ரூட்ஸ் மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனம் மற்றும் உடைமைகளை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில், அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு என்பது, வெள்ளலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்து கோயம்புத்தூரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சந்திரபாபுவிடம் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், 8 கிலோ 200 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், ரூ.42,400 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சந்திரபாபுவிடம் கஞ்சாவை கொள்முதல் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் அவரது கூட்டாளிகள், ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ் கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மாணிக்கம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு மீது துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...