கோவையில் கஞ்சா கும்பல் தலைவன் கைது - கூட்டாளிகள் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்த காரமடையை சேர்ந்த சந்திரபாபுவை கைது செய்த போலீசார், அவரது கூட்டாளிகள் 10 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சங்கனூர் சந்திப்பு அடுத்த ரூட்ஸ் மேம்பாலம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவரது இருசக்கர வாகனம் மற்றும் உடைமைகளை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில், அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் காரமடை பகுதியை சேர்ந்த சந்திரபாபு என்பது, வெள்ளலூர் பகுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்து கோயம்புத்தூரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் கட்டிட கூலி தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்று வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

சந்திரபாபுவிடம் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், 8 கிலோ 200 கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், ரூ.42,400 பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், சந்திரபாபுவிடம் கஞ்சாவை கொள்முதல் செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் அவரது கூட்டாளிகள், ஜலீல், கிஷோர், பாண்டி, ரியாஸ் கான், முருகன், சிவா, முருகேசன், பாண்டி, மாணிக்கம் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபர் என மொத்தம் 10 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்திரபாபு மீது துடியலூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...