கோவையில் வேலைக்கேற்ற சம்பளம் கிடைக்காத விரக்தி - இளைஞர் தற்கொலை!

கோவை அருகே வேலையில் குறைவான சம்பளம் கிடைத்ததால் மனமுடைந்த இளைஞர் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை வெள்ளக்கிணர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 27). ஒரு தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் அட்வைசராக அவர் வேலை செய்துவந்துள்ளார். அங்கு அவருக்கு சம்பளம் குறைவாக கிடைத்ததால், மனவருத்தத்தில் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வேலைக்குச் செல்லாத விரக்தி மற்றும் மனஉளைச்சலில் இருந்துவந்த கோகுல், நேற்று வீட்டில் இருந்த மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

 

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், கோகுல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...