தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துநர் - போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பேருந்தின் வாசல் கதவு திடீரென்று திறந்து கொண்டதால் நிலைதடுமாறிய நடந்துநர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திருப்பூர்: ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் ஒரு தனியார் பேருந்தில், நடந்துநராக ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் இருந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் இருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது போலீஸ் நிலைய வீதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, நடத்துநர் யுவராஜ் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்றிருந்தார்.

போலீஸ் நிலையம் அருகே வளைவில் பேருந்தை திருப்பிய போது திடீரென அதன் முன்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால், முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் உள்ளிட்டோர், படுகாயம் அடைந்த நடத்துநர் யுவராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு யுவராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...