திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தனியார் பேருந்தின் வாசல் கதவு திடீரென்று திறந்து கொண்டதால் நிலைதடுமாறிய நடந்துநர் கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: ஈரோட்டிலிருந்து பழனி செல்லும் ஒரு தனியார் பேருந்தில், நடந்துநராக ஈரோட்டை சேர்ந்த யுவராஜ் இருந்துவருகிறார். இந்த நிலையில், நேற்று ஈரோட்டில் இருந்து தாராபுரம் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரிய கடைவீதி வழியாக புது போலீஸ் நிலைய வீதியில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, நடத்துநர் யுவராஜ் பேருந்தின் முன்பக்க படிக்கட்டில் நின்றிருந்தார்.
போலீஸ் நிலையம் அருகே வளைவில் பேருந்தை திருப்பிய போது திடீரென அதன் முன்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால், முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் உள்ளிட்டோர், படுகாயம் அடைந்த நடத்துநர் யுவராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு யுவராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
போலீஸ் நிலையம் அருகே வளைவில் பேருந்தை திருப்பிய போது திடீரென அதன் முன்பக்க கதவு திறந்து கொண்டது. இதனால், முன்பக்க படிக்கட்டில் நின்று கொண்டிருந்த யுவராஜ் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
உடனே பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் உள்ளிட்டோர், படுகாயம் அடைந்த நடத்துநர் யுவராஜை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு யுவராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.