ஜெபக்கூட்டம் நடத்தப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட எஸ்.பியிடம் மனு

ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கல்.


கோவை: ஜெபக்கூட்டம் நடத்துவதற்குச் சிலர் இடையூறு செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜேக் நேசகுமார். இவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை பிரஸ் காலனியில் உள்ள சக்தி நகர் இரண்டாவது வீதியில் ஏல்பெத்தேல் ஜெப வீடு என்ற பெயரில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். கடந்த 2018ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த கோபால், ராஜேஷ், லாரன்ஸ் ஆகிய மூன்று பேரும் ஜெபக்கூட்டம் நடத்த இடையூறு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, ஜெப வீட்டில் ஜெப கூட்டம் நடத்தலாம் என உத்தரவு பெறப்பட்டு அமைதியான முறையில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகிறேன். இந்நிலையில் மீண்டும் அவர்கள் இடையூறு செய்தும், ஜெப கூட்டத்தில் வருபவர்களையும் மிரட்டியுள்ளனர். மேலும் ஜெப வீட்டைப் பழுது பார்த்த போது சில நபர்களுடன் வந்து பணிகளைத் தடுத்து நிறுத்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று ஜெபக்கூட்டம் நடத்தி வந்த நிலையில், தற்பொழுது இவர்களால் ஜெபக்கூட்டம் நடத்தாமல் இருப்பது தனக்கு மன உளைச்சலை தருகிறது. எனவே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜெப வீடு நடத்த அனுமதியும், பாதுகாப்பும் வழங்க ஆவணம் செய்யுமாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...