'உள்ளாட்சித் தேர்தலில் திமுக தில்லுமுல்லு செய்துதான் வெற்றி பெற்றது..!' - எம்எல்ஏ எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன். வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்று கோவையில் அதிமுக எம்எல்ஏ வேலுமணி பேச்சு.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.



கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு நகரக் கழக செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார். நகர அம்மா பேரவை செயலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.



கோவை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பிஆர்ஜி அருண்குமார் முன்னிலை வகித்துப் பேசினார்.



சிறப்பு விருந்தினராக அதிமுக தலைமை கழக செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு பேசினார்.



அப்போது பேசிய அவர், அம்மா ஆட்சியில் தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா உணவகம், மற்றும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் இன்றும் வீடுகளில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவை அனைத்தும் தந்தவர் அம்மா தான்.



இதேபோல் கோவை மாவட்டம் முழுவதும் சாலைகளும், பாலங்களும் அமைத்தது அதிமுக ஆட்சியில் தான். நாம் துவங்கிய பாலங்களைத் தான், இவர்கள் துவக்கி வைக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்துதான் திமுக வெற்றிபெற்றது.வாக்கு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்துதான் திமுக வெற்றி பெற்றது. இதை நான் சட்டசபையில் ஸ்டாலின் முன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினேன்.



வரும் தேர்தல்களில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என்றார். இந்த நிகழ்ச்சியில், திரைப்பட இயக்குநர் மனோஜ் குமார் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கலை முரசு காசிநாதன் ஆகியோர் பேசினர்.



முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், ஏ கே செல்வராஜ் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ ஓ.கே சின்ராஜ், ஊராட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...