கோவை சூலூர் அருகே சாலைத்தடுப்பில் அரசுப்பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக திருச்சி சாலையில் குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, டிவைடர் வைக்கப்பட்டுள்ள இடத்தை கடந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார்.



அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து அருகே இருந்த சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



இந்த விபத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...