கோவை சூலூர் அருகே சாலைத்தடுப்பில் அரசுப்பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக திருச்சி சாலையில் குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, டிவைடர் வைக்கப்பட்டுள்ள இடத்தை கடந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார்.



அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து அருகே இருந்த சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



இந்த விபத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...