கோவை சூலூர் அருகே சாலைத்தடுப்பில் அரசுப்பேருந்து மோதி விபத்து - உயிர் தப்பிய பயணிகள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், பயணிகள் அனைவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பாக திருச்சி சாலையில் குறுக்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு விபத்து ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறை சார்பில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருச்சியில் இருந்து கோவை நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, டிவைடர் வைக்கப்பட்டுள்ள இடத்தை கடந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக, பேருந்து ஓட்டுநர் முயற்சித்தார்.



அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து அருகே இருந்த சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) மீது மோதி விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்த நிலையில், பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காயமடைந்த பயணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.



இந்த விபத்தால் திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...