திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாரியம்மன் கோயில் தேர் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருள்மிகு மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் கோயிலின் பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
அதில், மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதல், ஏப்ரல் 4 ம் தேதி கம்பம் போடுதல், ஏப்ரல் 13 ம் தேதி திருத்தேரோட்டம், ஏப்ரல் 15 ம் தேதி மகா அபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மாரியம்மன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில், உடுமலை முக்கிய பிரமுகர்கள், மண்டகப் படிதாரரர்கள், உபய தாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
அதில், மார்ச் 28ம் தேதி நோன்பு சாட்டுதல், ஏப்ரல் 4 ம் தேதி கம்பம் போடுதல், ஏப்ரல் 13 ம் தேதி திருத்தேரோட்டம், ஏப்ரல் 15 ம் தேதி மகா அபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஆண்டு மாரியம்மன் கோவிலுக்கு ரூ.55 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில், உடுமலை முக்கிய பிரமுகர்கள், மண்டகப் படிதாரரர்கள், உபய தாரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.