கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மேம்பாலம் பணிகளால், கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிக்காக குடிநீர்க் குழாய்கள் மாற்றப்பட்டு, இணைப்பு பணிகள் வரும் ஜன.21 மற்றும் ஜன.22 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் கோவை மாநகராட்சியின் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழாய் இணைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வரும் 23ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செயல்பாட்டுக்குவரும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் தங்கள் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக 2 நாட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.