கோவை வடவள்ளி, கவுண்டம்பாளையம், வீரகேரளத்திற்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மேம்பாலம் பணிகளால், கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.



கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இந்தப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிக்காக குடிநீர்க் குழாய்கள் மாற்றப்பட்டு, இணைப்பு பணிகள் வரும் ஜன.21 மற்றும் ஜன.22 ஆகிய இரண்டு நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால், இத்திட்டத்தின் கீழ் பயன் பெறும் கோவை மாநகராட்சியின் கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழாய் இணைப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வரும் 23ஆம் தேதி காலை முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செயல்பாட்டுக்குவரும் என குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் தங்கள் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலமாக 2 நாட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு கோவை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...