நீலகிரியில் உறைபனியால் உறைந்த ஊட்டி - இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிகாலை வேளைகளில் கொட்டும் உறை பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீராக காட்சி அளித்தது.



நீலகிரி: தமிழகத்தில் உள்ள முக்கிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. இங்கு கோடை காலத்தில் இதமான காலநிலையும் குளிர்காலத்தில் கடும் குளிரும் நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது. குளிர்காலம் என்பது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை நீடிக்கும்.

ஆனால் நடப்பு குளிர்கால சீசனை பொறுத்தவரையில், டிசம்பர் மாத இறுதியிலே தாமதமாக தொடங்கியது. தொடக்க காலத்தில் நீர் பனிப்பொழிவாக மட்டுமே அதிகாலை நேரங்களில் காணப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக உறை பனியாக மாறிவிட்டது.



இதனால், அதிகாலை நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாக பதிவாவதால், ஊட்டியில் உறை பனிப் பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக, ஊட்டி நகரப் பகுதியிலும் அதனை சுற்றியுள்ள காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் கடும் உறை பனி படிந்து காணப்படுகிறது.



அந்த வகையில், இன்று காலை வழக்கம்போல தாவரவியல் பூங்காவில் 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவான நிலையில், காந்தல், எச் பி எஃப், தலைக்குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றது. இதனால், அந்தப் பகுதிகள் அனைத்திலும் உறைபனி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல படிந்து காணப்பட்டது.



இந்த உறைபனியால், ஊட்டி சுற்று வட்டாரபகுதியே குட்டி காஷ்மீரைப்போல காட்சியளித்தது. வாகனங்கள் மீது சுமார் ஒரு இன்ச் அளவிற்கு படித்திருந்த உறை பனியை பொதுமக்கள் கைகளால் எடுத்து வீசி விளையாடி மகிழ்ந்தனர். உறைபனியுடன், கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...