நீலகிரியில் உறைபனியால் உறைந்த ஊட்டி - இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அதிகாலை வேளைகளில் கொட்டும் உறை பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸாக பதிவான நிலையில், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பனிப்பொழிவால் குட்டி காஷ்மீராக காட்சி அளித்தது.



நீலகிரி: தமிழகத்தில் உள்ள முக்கிய மலைப்பிரதேசங்களில் ஒன்றாக ஊட்டி திகழ்ந்து வருகிறது. இங்கு கோடை காலத்தில் இதமான காலநிலையும் குளிர்காலத்தில் கடும் குளிரும் நிலவுவது வழக்கமாக இருந்து வருகிறது. குளிர்காலம் என்பது ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை நீடிக்கும்.

ஆனால் நடப்பு குளிர்கால சீசனை பொறுத்தவரையில், டிசம்பர் மாத இறுதியிலே தாமதமாக தொடங்கியது. தொடக்க காலத்தில் நீர் பனிப்பொழிவாக மட்டுமே அதிகாலை நேரங்களில் காணப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக உறை பனியாக மாறிவிட்டது.



இதனால், அதிகாலை நேரங்களில் வெப்பநிலை மிகவும் குறைவாக பதிவாவதால், ஊட்டியில் உறை பனிப் பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக, ஊட்டி நகரப் பகுதியிலும் அதனை சுற்றியுள்ள காந்தல், தலைக்குந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலை நேரங்களில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதால் கடும் உறை பனி படிந்து காணப்படுகிறது.



அந்த வகையில், இன்று காலை வழக்கம்போல தாவரவியல் பூங்காவில் 2டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே பதிவான நிலையில், காந்தல், எச் பி எஃப், தலைக்குந்தா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பநிலை மைனஸில் சென்றது. இதனால், அந்தப் பகுதிகள் அனைத்திலும் உறைபனி வெள்ளை கம்பளம் போர்த்தியது போல படிந்து காணப்பட்டது.



இந்த உறைபனியால், ஊட்டி சுற்று வட்டாரபகுதியே குட்டி காஷ்மீரைப்போல காட்சியளித்தது. வாகனங்கள் மீது சுமார் ஒரு இன்ச் அளவிற்கு படித்திருந்த உறை பனியை பொதுமக்கள் கைகளால் எடுத்து வீசி விளையாடி மகிழ்ந்தனர். உறைபனியுடன், கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...