வால்பாறையில் இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்றிரவு இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த மகேஷ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: வால்பறை பச்சமலை எஸ்டேட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது 23). இவர், சின்கோனா ஸ்டேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 23), சின்கோனா எஸ்டேட்டை சேர்ந்த நந்தகுமார் (வயது 22) மற்றும் ரொட்டிகடையை சேர்ந்த அஸ்வின் (வயது 18) ஆகியோருடன் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில், வால்பாறையிலிருந்து சின்கோனா எஸ்டேட் பகுதிக்கு சென்றுள்ளனர்.

சிறுகுன்றா எஸ்டேட் பகுதிக்கு செல்லும்போது, இருசக்கர வாகனத்தின் லைட் பழுதானதாகக் கூறப்படுகிறது. இதனால், சாலை தெரியாமல் நிலை தடுமாறிய இருசக்கர வாகனம் அங்கிருந்த பாறைமேல் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில், மகேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மூன்று பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

காயமடைந்த மகேஷை, அவ்வழியாக வந்த வாகனத்தில் ஏற்றி, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மகேஷ் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.



தகவலறிந்து வந்த காவல்துறையினர், இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற மணிகண்டன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...