கோவை பேரூர் பகுதியில் சேவல்சண்டை - 6 பேர் கைது

கோவை புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்திய 6 பேர் கைது.


கோவை: பேரூர் சுடுகாடு அருகே பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட 6 பேரை பேரூர் போலீசார் கைது செய்தனர்.

கோவை புறநகர்ப் பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சட்ட விரோதமாகச் சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பேரூர் சுடுகாடு அருகே உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குச் சேவல் சண்டை நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (35), மணிகண்டன் (35), ராஜேந்திரன் (38), முருகன் (37), பழனிச்சாமி (53), கண்ணன் (46) ஆகிய 6 பேரைக் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 2 சேவல் மற்றும் ரூ.1000 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...