வால்பாறையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த ஆளுநரைக் கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அமீர் தலைமையில் தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநரைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன, தமிழகத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கம் தலைவர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் கட்சி கொடியேந்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...