வால்பாறையில் ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த ஆளுநரைக் கண்டித்து வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


கோவை: வால்பாறையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.



கோவை மாவட்டம் வால்பாறை பேருந்து நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் அமீர் தலைமையில் தமிழக சட்டப்பேரவையின் மாண்பைச் சீர்குலைத்த தமிழக ஆளுநரின் நடவடிக்கையைக் கண்டித்து,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழக ஆளுநரைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன, தமிழகத்தின் மாண்பைக் கருத்தில் கொண்டு, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கம் தலைவர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டு கையில் கட்சி கொடியேந்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...