ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை யாரிடம்..? - அதிமுக புகழேந்தி பரபரப்பு தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவில் ஓபிஎஸ் உடன் மட்டுமே பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி பேச்சு.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் உடன் மட்டுமே பாஜக, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் அதிமுக ஒபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.



அப்போது அவர் கூறியதாவது, நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்ட, தாமகாவினர் ஈரோடு கிழக்கு தொகுதியிலும் போட்டியிடக் கோருவதாகவும், ஜி.கே வாசனிடம் மீண்டும் அத்தொகுதியை ஒப்படைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி தப்பிவிட நினைக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காகக் காத்திருப்பதாகக் காத்திருக்கிறோம். இரட்டை இலைக்குச் சொந்தக்காரர் ஓபிஎஸ் மட்டுமே ஆவார். தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக ஓபிஎஸ் உடன் பேசி தான் முடிவு செய்வார்கள் எனக் குறிப்பிட்டார்.



மேலும் தொடர்ந்து பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்று தோல்வி கண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அரசியல் அனாதை ஆகி விட்டார். அவருக்குக் கருத்துச் சொல்ல உரிமை இல்லை. திரை மறைவில் அதிமுகவை ஒழிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

பழனிசாமி என்ற சர்வாதிகாரி ஒழிய வேண்டும் என்பதற்காகவே தான் ஓபிஎஸ் உடன் இருக்கிறேன்.தற்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை விட, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி புத்திசாலி. கள நிலவரம் தெரிந்தவர்.

தனது இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்து விட்டதால், அவருக்குக் கட்சியில் எந்த பதவியும் இல்லை. அதிமுகவிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றது ஓபிஎஸ் ஆல் மட்டுமே. ரோஷம் இருந்தால் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் கையெழுத்திட்ட பதவியை ராஜினாமா செய்யட்டும், என்றார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...