வால்பாறை அடுத்த உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குள் புகுந்த 4 காட்டு யானைகள், சத்துணவு கூடத்தை உடைத்து சேதப்படுத்திவிட்டு, அருகே இருந்த கோவில் சுவரையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் நுழையும், காட்டு யானைகள் வீடுகள் மளிகை கடைகள், சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து வீட்டிற்குள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த 4 காட்டு யானைகள், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் சுவரை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.

மேலும் ஜன்னல் மற்றும் கதவுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், அங்கிருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்து மாரியம்மன் கோவில் சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளன.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் நுழையும், காட்டு யானைகள் வீடுகள் மளிகை கடைகள், சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து வீட்டிற்குள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த 4 காட்டு யானைகள், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் சுவரை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.
மேலும் ஜன்னல் மற்றும் கதவுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், அங்கிருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்து மாரியம்மன் கோவில் சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளன.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.