வால்பாறை அருகே சத்துணவு மையம், கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பரபரப்பு..!

வால்பாறை அடுத்த உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குள் புகுந்த 4 காட்டு யானைகள், சத்துணவு கூடத்தை உடைத்து சேதப்படுத்திவிட்டு, அருகே இருந்த கோவில் சுவரையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் நுழையும், காட்டு யானைகள் வீடுகள் மளிகை கடைகள், சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து வீட்டிற்குள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த 4 காட்டு யானைகள், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் சுவரை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.



மேலும் ஜன்னல் மற்றும் கதவுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், அங்கிருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்து மாரியம்மன் கோவில் சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளன.



இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...