ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சூலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை சூலூர் அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வி.எம்.சி மனோகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சி. மனோகரன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாகவும் ஆன்லைனில் உள்ளிட்ட விளையாட்டுக்கு தடை செய்யும் மசோதாவை அங்கீகரிக்காமல் இருந்து வரும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது, என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...