ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி சூலூரில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி கோவை சூலூர் அருகே வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி வி.எம்.சி மனோகர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே ஆளுநர் ஆர்.என்.ரவியை, மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இறையாண்மைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு, சட்டப் பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.எம்.சி. மனோகரன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு எதிரானதாகவே இருந்து வருகிறது.

சட்டமன்ற மாண்பை கெடுக்கும் விதமாகவும் ஆன்லைனில் உள்ளிட்ட விளையாட்டுக்கு தடை செய்யும் மசோதாவை அங்கீகரிக்காமல் இருந்து வரும் ஆளுநரின் செயல்பாடு கண்டனத்துக்குரியது, என்றார்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...