கோவையில் ஜாவா ஷோரூமில் திடீர் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்குகள் தீக்கிரை!

கோவை - அவினாசி சாலையில் செயல்பட்டு வந்த ஜாவா ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டிருந்த, பல லட்சம் மதிப்பிலான 7 சொகுசு பைக்குகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகின.


கோவை: கோவை - அவினாசி சாலையில் ஜாவா எனப்படும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் பலவகையான சொகுசு பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஷோரூமில் ஏற்கனவே 9 இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த ஷோரூமில் நேற்றைய தினம் (18.01.2023) நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீக்கிரையாகின.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்து தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஷோரூமிற்கு காவலாளி இல்லாததால் தீ முழுமையாக பரவிய பிறகு வெளியில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...