கோவையில் ஜாவா ஷோரூமில் திடீர் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்குகள் தீக்கிரை!

கோவை - அவினாசி சாலையில் செயல்பட்டு வந்த ஜாவா ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டிருந்த, பல லட்சம் மதிப்பிலான 7 சொகுசு பைக்குகள் முழுவதும் தீயில் எரிந்து சேதமாகின.


கோவை: கோவை - அவினாசி சாலையில் ஜாவா எனப்படும் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் ஷோரூம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஷோரூமில் பலவகையான சொகுசு பைக்குகள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஷோரூமில் ஏற்கனவே 9 இருசக்கர வாகனங்கள் சர்வீஸ் செய்வதற்கு விடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த ஷோரூமில் நேற்றைய தினம் (18.01.2023) நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் தீ கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்கள் முழுவதுமாக தீக்கிரையாகின.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தீ விபத்து தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஷோரூமிற்கு காவலாளி இல்லாததால் தீ முழுமையாக பரவிய பிறகு வெளியில் தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...