கோவை பாலமலை ஆதிவாசிகளுக்கு ரூ.5.74 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்!

கோவை மாவட்டத்தில் பாலமலை ஆதிவாசிகள் கிராமத்திற்கு சுமார் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில், 477 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள நாயக்கன்பாளையம் ஊராட்சியில் ஆதிவாசி கிராமமான பாலமலை உள்ளது. இங்குள்ள ரங்கநாதர் கோவில் அன்னதானக்கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் பூமா வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, கூடலூர் நகராட்சித்தலைவர் அறிவரசு, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நர்மதா, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆதிவாசி கிராம மக்கள் உற்சாக நடனமாடி வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து வேலாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் அமைக்கப்பட்ட முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.



அதன்பிறகு, 26 பேருக்கு சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவிதொகை, 23 பேருக்கு வருவாய் துறையால் வழங்கப்படும் இலவச வீட்டுமனை பட்டா, 35 பேருக்கு பசுமை வீடு, 7 நபர்களுக்கு மகளிர்த்திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 67 பேருக்கு பழங்குடியினர் விவசாய அடையாள அட்டை, 241 பேருக்கு தமிழ்நடு வனத்துறை சார்பில் உதவிகள் என மொத்தம் 477 நபர்களுக்கு சுமார் 5 கோடியே 74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பழங்குடி மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். மேலும், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் நமக்கு நாமே திட்டம் மூலம் வேலை செய்ய சுமார் 24 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...