உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் - கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பாரம்பரிய வள்ளி கும்மியாட்டத்தை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ளது மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான திருமூர்த்திமலை. இங்கு, சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் சிறுதானிய பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி குழுவுடன் உடுமலை ராயல் அரிமா சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ஆகியவையும் இணைந்து இந்த பொங்கல் விழாவை நடத்தினர்.



கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக, பாரம்பரிய வள்ளி கும்மி, குதிரை வண்டி, மாட்டு வண்டி ஊர்வலம் நடைபெற்றது.



காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக கலந்து கொண்டு, பாரம்பரிய வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி ஆனந்தன், வட்டாட்சியர் கண்ணாமணி, மாவட்ட சுற்றுலாத்துறை ஒருங்கிணைப்பாளர், மைவாடி விவேகானந்தா வித்யாலயம் நிறுவனர் மூர்த்தி, உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் தலைவர் சத்தியம் பாபு, எஸ் எம் டிராவல்ஸ் நாகராஜ், தளிபேரூராட்சி தலைவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...