காட்சிப்பொருளாக நிற்கும் குடிநீர் தொட்டி - உடுமலை தாலுக்கா அலுவலகத்தில் அவலம்..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தாலுக்கா அலுவலகத்தில் முறையான குடிநீர் வசதி செய்யப்பட்டாமல், அங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி இதுவரை காட்சிப்பொருளாக மட்டுமே இருந்து வருவது அப்பகுதி மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுக்கா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, இ-சேவை மையங்கள், நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி இதுவரை செய்யப்படவில்லை.



இங்கு தாலுக்கா அலுவலக பிரதான நுழைவு வாயில் அருகே ஒரு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியிலும் முறையாக தண்ணீர் நிரப்பப்படாமல் கிடப்பில் போடப்பட்டு, வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால், அரசு சார்ந்த பணிகளுக்காக தாகத்துடன் வரும் பொதுமக்கள், தாகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி, தாலுக்கா அலுவலக வளாகத்தில் தேவையான குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...