உடுமலையில் இரும்புக் கம்பிகள் திருடிய ஒப்பந்ததாரர் - போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வரும் இடத்தில் வைக்கப்பட்ட இரும்பு கம்பிகளை திருடிய ஒப்பந்ததாரரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பாலப்பம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிகாலையில், தேசிய நெடுஞ்சாலை அமைத்து வரும் இடத்தில் இரும்பு கம்பிகளை ஒப்பந்ததாரர் திருடியுள்ளார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அவரை கையும் களவுமாகப் பிடித்து வைத்துக் கொண்டு உடுமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை காவல்துறையினர், பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த ஒப்பந்ததாரரான திண்டுக்கல் மாவட்டம் பேகம்புத்தூர் பகுதியை சேர்ந்த காஜா மொய்தீன் (வயது37) என்பவரை கைது செய்தனர். அவர் மீது ஐ.பி.சி.379 பிரிவின்கீழ் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை அமைக்கப் பயன்படுத்தப்படவிருந்த இரும்பு கம்புகளை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து, கம்பிகளை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...