தமிழகம்.. தமிழ்நாடு சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டு ஆளுநர் விளக்கம்

ஒரு மாத காசி தமிழ்ச் சங்கமம் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்பதற்குப் பதில் தமிழகம் என்று பேசியது ஏன் என்பதற்கு விளக்கம்.


சென்னை: சமீபத்தில் விழா ஒன்றில் தமிழ்நாடு குறித்துப் பேசிய போது ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி 4ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில், காசியுடன் தமிழ் மக்களின் பழமையான கலாச்சார தொடர்பைக் கொண்டாடும் ஒரு மாத காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெற்றது.

இதில், பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களைப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வரலாற்றுப் பண்பாடு பற்றி ஆளுநர் பேசும்போது, காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பைக் குறிக்கத் தமிழகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.

எனவே வரலாற்றுப் பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன். எனது கண்ணோட்டத்தைத் தமிழ்நாட்டில் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போலப் பொருள் கொள்வதோ? அனுமானம் செய்து கொள்வதோ தவறானது, மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பாடு என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது பேச்சு அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை என்னும் வாதங்களை விவாத பொருளாக்கி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் விளக்கம் அளித்துள்ள நிலையில் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...