உதகை அடுத்த கல்லட்டி சோதனை சாவடியில் உலா வந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கல்லட்டி சோதனை சாவடி அருகே நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலை பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

இந்த பகுதியில் வனவிலங்குகள் வேட்டை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கண்காணிக்கும் வகையில், வனத்துறை சார்பாக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் பொதுமக்களும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் இந்த மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் மலை பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் அடிக்கடி சிறுத்தை ஒன்று உலா வருவதால், இரவுநேர பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி சோதனை சாவடி அருகே சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...