உதகை அடுத்த கல்லட்டி சோதனை சாவடியில் உலா வந்த சிறுத்தை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கல்லட்டி சோதனை சாவடி அருகே நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் கல்லட்டி மலை பாதையும் ஒன்று. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை மிகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகிறது.

இந்த பகுதியில் வனவிலங்குகள் வேட்டை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை கண்காணிக்கும் வகையில், வனத்துறை சார்பாக சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உதகையில் இருந்து மசினகுடி செல்லும் பொதுமக்களும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணிகளும் இந்த மலைப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் மலை பாதையில் உள்ள 15-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள சோதனை சாவடி அருகே இரவு நேரங்களில் அடிக்கடி சிறுத்தை ஒன்று உலா வருவதால், இரவுநேர பணியில் இருக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழலில் இருப்பதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் தேதி சோதனை சாவடி அருகே சிறுத்தை உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...