கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகையை சேர்ந்த சரவணன் (49) என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணன் (49). இவர் கோத்தகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் முச்சுவிட முடியாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.