மேட்டுப்பாளையம் பெள்ளாதி மாரியம்மன் கோயில் நில ஏல அறிவிப்பு ரத்து - நடந்தது என்ன?

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பெள்ளாதி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தொட்டிபாளையம் கிராமத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெள்ளாதி மாரியம்மன் கோவில் உள்ளது.

சுமார் 30 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு சொந்தமாக உள்ள இந்த கோவில், காரமடை அரங்கநாதர் கோவிலின் உப கோவிலாக உள்ளது. இந்த ஆலயத்திற்கு சொந்தமாக சுமார் 17 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கோவிலுக்கு சொந்தமாக உள்ள இந்த விவசாய நிலத்தை, கோயில் பூசாரிகள் பராமரித்து வரும் நிலையில், அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று இந்த 17ஏக்கர் பூமியை ஏலம் விட முடிவு செய்து அதற்கான பணிகளை கோயில் வளாகத்தில் நடத்த முற்பட்டனர்.



காரமடை அரங்கநாதர் கோவில் ஆய்வாளர் ஹேமலதா முன்னிலையில் இந்த ஏலத்தை நடத்த முயன்றபோது, கோவில் பூசாரிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் என நிர்வாகத்தினர் இரு தரப்பாக பிரிந்து முறையான அறிவிப்பு வழங்காமல் ஏலத்தை நடத்த அதிகாரிகள் முயற்சிப்பதாகக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரிடையே மோதல் உருவான நிலையில், காவல்துறையினர் வந்து சமரசம் செய்தனர். இருப்பினும், தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டதால் இன்று நடைபெற இருந்த ஏலம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல்துறை அறிவுறுத்தலின் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், விரைவில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...