கோவை மசக்காளிபாளையம் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை: கோவை மாநகராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52 மற்றும் 53வது வார்டு, மசக்காளிபாளையம் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் கட்டிடங்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், மாநகராட்சி உதவி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் குழு, அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த பழமுதிர், ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகளின் முன் பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 52 மற்றும் 53வது வார்டு, மசக்காளிபாளையம் பிரதான சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளின் கட்டிடங்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர்.
ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில், மாநகராட்சி உதவி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் குழு, அங்கு ஆக்கிரமித்து கட்டியிருந்த பழமுதிர், ஹார்டுவேர் உள்ளிட்ட கடைகளின் முன் பகுதிகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.