கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் மாடியில் இருந்து தேங்காய் பறித்துக் கொண்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
கோவை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் கோவை கணபதி அருகேயுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் வீட்டின் மாடியில் நின்றபடி, அருகே இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர் வீட்டின் மாடியில் நின்றபடி, அருகே இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.