உடுமலையில் ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை ஒட்டி உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


திருப்பூர்: உடுமலையில் அதிமுக ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு ஓபிஸ் அணி சார்பில் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு நகரச் செயலாளர் யூ.ஜி.கே சற்குணசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



மேலும் இந்த நிகழ்வில் திருப்பூர் புற நகர் மாவட்டச் செயலாளர் காமராஜ் கலந்து கொண்டு 100-க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் வெங்கடுபதி, மாவட்ட இணைச்செயலாளர் கிருஷ்ணம்மாள், திருப்பூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்ஜிஆர் என்கிற பாலகிருஷ்ணன், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜபிரகாஷ், நகர நிர்வாகிகள் அஞ்சலி, லைன் நடராஜ், ஜெயசீலன், ஜாபர், அருண் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...