நீலகிரியில் களைகட்டிய காணும் பொங்கல் கொண்டாட்டம் - ஊட்டியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்..!

காணும் பொங்கலையொட்டி உதகைக்கு குடும்பம் குடும்பமாக படையெடுத்துள்ள சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.



நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் பொங்கல் விடுமுறை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை என்பது வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.



இந்த நிலையில் காணும் பொங்கல் தினமான இன்றும் சுற்றுலா பயணிகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை காண குவிந்து வருகின்றனர்.



குறிப்பாக குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் அரசு தாவரவியல் பூங்காவில் சென்று கண்ணாடி மாளிகையை கண்டு ரசிப்பதுடன் கிக்யூ புல்வெளிகளிலும் அமர்ந்து குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர்.

அதேபோல உதகை படகு இல்லத்தில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மிதிபடகு, துடுப்பு படகு மற்றும் மோட்டார் படகுகளில் சவாரி செய்து உற்சாகத்துடன் செல்கின்றனர்.



இதே போல ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்த வண்ணமாக இருப்பதால் காலை முதலே தொட்டபெட்டா சாலையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.



இதன் காரணமாக சுற்றுலா தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் காவல்துறை கண்காணிப்பு பணியை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...