திருப்பூர் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழா - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் சௌமியா கலந்துகொண்டு பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.



திருப்பூர்: பல்லடத்தில் 34வது சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்கம், பல்லடம் போக்குவரத்து காவல் துறையினர், பல்லடம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தாலுக்கா வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் இணைந்து இதை நடத்தினர்.



சாலை பாதுகாப்பு வார விழாவின் ஒரு பகுதியாக, தலைக்கவசம் அணிவது குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



பல்லடம் நால்ரோட்டில் துவங்கிய இந்த பேரணியை பல்லடம் டி.எஸ்.பி செளமியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செட்டிபாளையம் பிரிவு வரை சென்ற இந்த இரு சக்கர வாகனப் பேரணியானது, என்ஜிஆர் சாலை வழியாக மீண்டும் நால் ரோட்டில் நிறைவுபெற்றது.



கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் போட்டு இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும், சீட் பெல்ட் அணிந்து காரில் வந்தவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...