எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் - ஊர்வலமாக வந்து கோவை அதிமுகவினர் மலர் மரியாதை

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளையொட்டி, கோவையில் அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



கோவை: மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி, எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுகவினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் அவிநாசிசாலை அண்ணா சிலை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதிமுக கோவை மாநகர் மாவட்ட செயலாளரும், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுணன் முன்னிலையில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் செ.ம.வேலுசாமி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் இதய தெய்வம் மாளிகையில் இருந்து ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



அதனைத் தொடர்ந்து, இதய தெய்வம் மாளிகையில் உள்ள எம்.ஜி.ஆரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...