பல்லடம் அருகே 20 நாட்டு மாடுகளுடன் பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாடிய விவசாயி!

பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்குப் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்து அசத்திய விவசாயி ஈஸ்வரன்.


திருப்பூர்: பல்லடம் அருகே 20-க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு விவசாயி ஒருவர் பாரம்பரிய முறையில், மாட்டுப்பொங்கல் கொண்டாடியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த, சின்னக்காளிபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன்(63). விவசாயியான இவரிடம், 20-க்கும் மேற்பட்ட காங்கேயம் இன நாட்டு மாடுகள் உள்ளன. மாட்டுப் பொங்கல் தினமான இன்று மத்தளங்கள் முழங்க இவரது தோட்டத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இது குறித்து ஈஸ்வரனிடம் கேட்டபோது, 'மாடுகளை பட்டியாபுரம் தாயாக வழிபட்டு வருகிறோம். அன்றாடம் உழவுக்குச் செல்லும் முன் மாடுகளை வழிபட்ட பின் தான் பணிகளை ஆரம்பிப்போம். மாட்டுப் பொங்கல் நாளில், மாடுகளைக் குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலை சூடி அலங்கரிப்போம்.



தொடர்ந்து, சிறியதாக தெப்பக்குளம் கட்டி, அதில் பால், தண்ணீர் ஊற்றி, குளத்தின் மறுபுறம் முடக்கத்தான், ஆத்திமாறு, ஊஞ்சமாறு ஆகியவற்றைக் கயிறாக்கிக் கட்டுவோம். மாட்டுப் பொங்கலான இன்று உழவுக்குப் பயன்படும் அனைத்து உபகரணங்களையும் வைத்து பூஜை செய்வோம்.



மேலும் மாடுகளுக்குப் பொங்கல் படைத்து, கரும்பு, முறுக்கு உள்ளிட்டவற்றை மாட்டின் கொம்புகளில் கட்டுவோம். தெப்பக்குளம் தாண்டி செல்லும் மாடுகள், முடக்கத்தான் கொடியை அறுத்துக்கொண்டு தெப்பக்குளத்தின் மறுபக்கம் செல்ல வேண்டும்.



அவ்வாறு சென்றால் தான் விவசாய நிலத்தின் முடக்கு நீங்கியதாக அர்த்தம். இதையடுத்து, இறைவனை வழிபட்டு அனைவரும் பொங்கல் உண்போம். முப்பாட்டன், பாட்டன், தந்தை என, வழிவழியாக இந்த மாட்டுப் பொங்கல் வழிபாட்டைச் செய்து வருகிறோம், என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொண்டார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...