முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்பு.


நீலகிரி: முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. குறும்பர் பழங்குடியினர் இசை மற்றும் நடனத்துடன் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்து உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.



பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், துணை கள இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சார்பாகத் தனித் தனியாகப் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் அங்கிருந்த குறும்பர் இன பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார இசைக் கருவிகளை இசைத்து நடனமாடினர்.



இதனைக் கண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினர். தொடர்ந்து யானைகளுக்குப் பொங்கல், சாதம், கரும்பு, வெல்லம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே யானைகள் முகாமில் உள்ள விநாயகருக்குக் கோவிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று யானைகள் பூஜை செய்வதை வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் கோவில் முன் வளர்ப்பு யானைகளை வைத்து பூஜை செய்யாமலும், யானை பூஜைகள் நடைபெறாததும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...