முதுமலை புலிகள் காப்பகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்பு.


நீலகிரி: முதுமலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. குறும்பர் பழங்குடியினர் இசை மற்றும் நடனத்துடன் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் உள்ளன. இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டு, அலங்காரங்கள் செய்து உணவு கூடத்திற்கு அழைத்து வரப்பட்டு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன.



பின்னர் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர், துணை கள இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சார்பாகத் தனித் தனியாகப் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கியதும் அங்கிருந்த குறும்பர் இன பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சார இசைக் கருவிகளை இசைத்து நடனமாடினர்.



இதனைக் கண்ட நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடினர். தொடர்ந்து யானைகளுக்குப் பொங்கல், சாதம், கரும்பு, வெல்லம், ஆப்பிள், தர்பூசணி உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன. அதனை அங்குக் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே யானைகள் முகாமில் உள்ள விநாயகருக்குக் கோவிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் தினத்தன்று யானைகள் பூஜை செய்வதை வழக்கமாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் கோவில் முன் வளர்ப்பு யானைகளை வைத்து பூஜை செய்யாமலும், யானை பூஜைகள் நடைபெறாததும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...