கோவை இடையர்பாளையம் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்ற நிலையில், விரக்தியில் இருந்த கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை.
கோவை: கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன். இவரது மனைவி கவிதா. கூலித் தொழிலாளியான அழகேஸ்வரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மனைவி கவிதா அழகேஸ்வரனிடம் இருந்து பிரிந்து சென்று அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதன் காரணமாக விரக்தியில் இருந்து வந்த அழகேஸ்வரன், நேற்றைய தினம் (15.01.2023) தனது வீட்டில் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு சென்ற துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மனைவி கவிதா அழகேஸ்வரனிடம் இருந்து பிரிந்து சென்று அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதன் காரணமாக விரக்தியில் இருந்து வந்த அழகேஸ்வரன், நேற்றைய தினம் (15.01.2023) தனது வீட்டில் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து அங்கு சென்ற துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.