கோவை அருகே மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் தற்கொலை!

கோவை இடையர்பாளையம் அருகே குடும்ப பிரச்சினையில் மனைவி பிரிந்து சென்ற நிலையில், விரக்தியில் இருந்த கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை.


கோவை: கோவை மாவட்டம் காங்கேயம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன். இவரது மனைவி கவிதா. கூலித் தொழிலாளியான அழகேஸ்வரன் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மனைவி கவிதா அழகேஸ்வரனிடம் இருந்து பிரிந்து சென்று அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதன் காரணமாக விரக்தியில் இருந்து வந்த அழகேஸ்வரன், நேற்றைய தினம் (15.01.2023) தனது வீட்டில் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு சென்ற துடியலூர் காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் கணவர் வீடு தெளிக்க பயன்படுத்தப்படும் மஞ்சள் சாயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...