கோவை தெற்குபாளையம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை - 4 பேர் கைது!

கோவை தெற்குபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய ரோந்து பணியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சேவல் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்குப் பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா சங்கர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த கலிவரதராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 சேவல்கள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...