கோவை தெற்குபாளையம் அருகே அனுமதியின்றி சேவல் சண்டை - 4 பேர் கைது!

கோவை தெற்குபாளையம் பகுதியில் போலீசார் நடத்திய ரோந்து பணியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சேவல் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரிய நாயக்கன் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட தெற்குப் பாளையம் பகுதியில் சிலர் சேவல் சண்டையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில், பெரியநாயக்கன் பாளையம் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில், போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட பெரிய நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார், மணிகண்டன், தெற்குப்பாளையத்தைச் சேர்ந்த ஜீவா சங்கர் மற்றும் கூடலூரைச் சேர்ந்த கலிவரதராஜன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 சேவல்கள் மற்றும் 300 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...