ஊட்டியில் ஜான் சல்லிவனின் நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர் ராமச்சந்திரன் மரியாதை!

ஊட்டி நகரை கண்டறிந்து, நகரத்தை கட்டமைத்த ஆட்சியர் ஜான் சல்லிவனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் மரியாதை.


நீலகிரி: 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த ‘ஜான் சல்லிவன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகரத்தை 200 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ‘ஜான் சல்லிவன்” கண்டறிந்து ஊட்டியைக் கட்டமைத்தார்.



மேலும் வெளி உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி கடைபிடிக்கபட்டு வருகிறது. இதையொட்டி இன்று உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவன், ஜூன் 15 ஆம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தார். ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.

இவர் இயற்கை சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் முயற்சியாலேயே ஊட்டி ஏரி உருவாக்கப்பட்டது. ஜான் சல்லிவன் கடந்த 1855ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

அவரை நினைவு கூறும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை முக்கோண வடிவுள்ள இடத்தில் ரூ.20லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அடி உயரத்தில் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, முதலமைச்சரால் 21.05.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது என்றார்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...