கோவையில் மாட்டு பொங்கல் - மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து வழிபட்ட விவசாயிகள்!

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோவை ராமநாதபுரம் அருகே விவசாயிகள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை அணிவித்து வழிபாடு செய்து கொண்டாடினர்.



கோவை: தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்களது மாடுகளை அலங்கரித்து வழிபட்டு மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த பாரதி நகர் பகுதியில், அதிகாலை முதலே மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகள், மாட்டின் மீது மஞ்சள் தெளித்தும், நெற்றியில் குங்குமம் வைத்தும் வழிபட்டனர்.



இதனை தொடர்ந்து மாட்டுக்கு மாலை அணிவித்த உரிமையாளர்கள், அதற்கு புதிய மூக்கணாங் கயிறையும் அணிவித்தனர்.

இதையடுத்து, மாட்டுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மேலும், இன்று ஒரு நாள் மட்டும் மாட்டை கவனிக்காமல், எப்பொழுதும் மாட்டின் மீது கவனம் செலுத்தி அன்பாய் இருக்க வேண்டுமென மாடு வளர்க்கும் இளம் பெண்கள் கூறினர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...