திருப்பூரில் தமிழர் பேரவை சார்பில் சமத்துவ பொங்கல் விழா - சாதி, மதம் கடந்து சமத்துவ பொங்கல் வைத்த பெண்கள்

திருப்பூரில் தமிழர் பேரவையின் சார்பில் நடைபெற்ற 31 ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழாவில் 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ பெண்கள் சாதி மதத்தை கடந்து சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் தமிழர் பேரவை சார்பில் 31 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது.



இதில் சாதி மதத்தை கடந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ பெண்கள் ஒரே இடத்தில் 150 பொங்கல் பானைகளில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியமான தப்பாட்டம் முழங்க ஆண்களும் பெண்களும் கலாச்சார புத்தாடைகள் அணிந்து பொங்கல் திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் பொங்கல் பானையில் பொங்கல் பொங்கி வரும் பொழுது குலவை சப்தமிட்டு பொங்கலோ பொங்கல் என்று முழக்கமிட்டனர்.



இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...