கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பூனாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில், தங்களுக்கு சொந்தமாக கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (54) மற்றும் காயத்ரி (40) ஆகிய இரு தரப்பினரும் மாநகராட்சி அனுமதியின்றி மணல் மற்றும் செங்கற்களை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் ஏட்டு கிஷோர் குமார், இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மாநகராட்சி இடத்தில் கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டதற்கான காரணம் மற்றும் தகராறு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...