சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது பிக்கப் வேன், லாரி மோதியது, இருசக்கர வாகனங்கள் மோதியது உள்ளிட்ட விபத்துகள் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை மாநகரில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது பிக்கப் வேன் மற்றும் லாரி மோதியது, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியது, சாலையைக் கடந்த மூதாட்டி மீது ஸ்கூட்டர் மோதியது உள்ளிட்ட சம்பவங்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உப்பிலிபாளையம் என்.ஜி.ஆர். வீதியைச் சேர்ந்த சீனிவாசன் (58), தனது பைக்கில் திருச்சி ரோடு ஒலிம்பஸ் பேருந்து நிறுத்தம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பிரெட்டியைச் சேர்ந்த பாப்பிரெட்டி (24) ஓட்டி வந்த பொலிரோ பிக்கப் வேன், பைக் மீது மோதியது. இதில் கீழே விழுந்த சீனிவாசனின் வலது முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (47), தனது மனைவி ரம்யா (41) உடன் ஸ்கூட்டரில் நல்லாம்பாளையம் கண்ணப்பன் நகர் வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ரூபன் (20) ஓட்டி வந்த பைக், அவர்களது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பிரசாந்துக்கு முகத்திலும், ரம்யாவுக்கு இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அண்ணாமலை (64), செக்போஸ்ட் ரோடு அருகே பைக்கில் சென்றபோது, தேவா (23) ஓட்டி வந்த பிக்கப் வாகனம் அவர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு சந்திப்பு அருகே கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (28) பைக்கில் சென்றபோது, கே.கே. புதூரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (25) ஓட்டி வந்த ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து அவரது பைக் மீது மோதியது. இதில் ஹரிஹரனின் இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுந்தராபுரத்தைச் சேர்ந்த அய்யம்மாள் (71), குறிச்சி அரசு பள்ளி எதிரே பொள்ளாச்சி மெயின் ரோட்டை கடக்க முயன்றபோது, தண்டாயுதபாணி (46) ஓட்டி வந்த ஸ்கூட்டர் அவர் மீது மோதியது. இதில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட அய்யம்மாள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மகள் அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுந்தராபுரம் அழகு நகரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் (41), எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது, ஆறுமுகம் (52) ஓட்டி வந்த ஐச்சர் லாரி அவரது பைக் மீது மோதியது. இதில் அப்துல் ஹக்கீமின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் லாரி ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...