கோவையில் சாலை பாதுகாப்பு வார மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாலை பாதுகாப்பு வாரத்தின் 5வது நாளையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்து கலந்து கொண்டார்.



கோவை: விபத்துக்களை தவிர்க்கும் விதமாக சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி சாலை பாதுகாப்பு வாரத்தின் 5ஆம் நாளான இன்று, கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.



கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.



இந்த மாரத்தான் அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கிலோமீட்டருக்கு நடைபெற்றது.



இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன், துணை ஆணையாளர் சிலம்பரசன், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் உக்கடம் காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...