கோவையில் சாலை பாதுகாப்பு வார மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்

சாலை பாதுகாப்பு வாரத்தின் 5வது நாளையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்து கலந்து கொண்டார்.



கோவை: விபத்துக்களை தவிர்க்கும் விதமாக சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



அதன்படி சாலை பாதுகாப்பு வாரத்தின் 5ஆம் நாளான இன்று, கோவை மாநகர காவல் துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.



கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்து அவரும் பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.



இந்த மாரத்தான் அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கிலோமீட்டருக்கு நடைபெற்றது.



இதில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன், துணை ஆணையாளர் சிலம்பரசன், உதவி ஆணையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதே போல் உக்கடம் காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர காவல் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...