கோவையில் 2024ல் 56-வது IWWA ஆண்டு மாநாடு

இந்திய வாட்டர் ஓர்க்ஸ் அசோசியேஷன் எனப்படும் IWWA அமைப்பானது, 56வது மாநாட்டை 2024ம் ஆண்டில் கோவையில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதற்கான முதல்‌ புல்லட்டினை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் வெளியிட்டார்.


கோவை: இந்திய வாட்டர் ஒர்க்ஸ் அசோசியேஷனாது (IWWA) நகராட்சி, தொழில்துறை, விவசாய பயன்பாடுகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு, கழிவுநீர் அகற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய வல்லுநர்களைக் கொண்ட தன்னார்வ அமைப்பாகும்.

இந்த அமைப்பின் நோக்கம் புதிய மற்றும்‌ கழிவு நீரை நீர்வகிப்பதில்‌ அறிவியல்‌, தொழில்நுட்பம்‌, பொருளாதாரம்‌, சுற்றுச்சூழல்‌, சூழலியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ ஆகியவற்றின்‌ வளாச்சியைத்‌ தூண்டி ஊக்குவிப்பதே ஆகும். இந்தத்‌ துறையில்‌ பணிபுரியும்‌ நபர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கு கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை வழங்குவதற்கான ஒரு பொதுவான தளத்தை இந்த அமைப்பு வழங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டு ஒவ்வொரு மாநிலத்தில் முக்கிய நகரத்தை தேர்வு செய்து இந்த அமைப் தமது மாநாட்டை நடத்திவருகிறது. அதன்படி, 55வது மாநாடு இந்த ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம்‌ பூனேவில்‌ நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு 56வது மாநாட்டினை கோவையில் நடத்த IWWA அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்கமாக, புல்லட்டின் வெளியிடும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையா்‌ மு.பிரதாப் கலந்துகொண்டு மாநாட்டிற்கான முதல் புல்லட்டினை வெளியிட்டார்.



இந்நிகழ்ச்சியில், மாநகர காவல்‌ ஆணையாளர்‌ வே.பாலகிருஷ்ணன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மரு.மோ.ஷாமிளா, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய தலைமை பொறியாளர்‌ டி.சீனிவாசன்,‌ கண்காணிப்பு பொறியாளர்‌ எ.செந்தில்குமார்‌, செயற்பொறியாளர்‌ எம்‌.மதியழகன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...