'10 கோடி தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து..!' - கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன், பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவிப்பு.


தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும்,பாஜக மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகெங்கும் வாழும் 10 கோடிக்கும் அதிகமான தமிழர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. எனவே, பா.ஜ.க., மகளிரணி தேசியத் தலைவர் என்ற முறையில் நாட்டு மக்கள் அனைவருக்கும், எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் பண்டிகை என்பது இந்த மண்ணின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பண்டிகை. மனிதன் தனது வாழ்வுக்கும் துணை செய்யும் இயற்கைக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாள். உலகம் 'மனிதநேயம்' பற்றி இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற 'உயிர்மைநேயத்தை' வலியுறுத்தி கொண்டே இருக்கிறது.

அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை. பருவமழை மாற்றத்தால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, உலகம் பேரபயாத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், இயற்கையின் முக்கியத்துவத்தை நமக்கும் உணர்த்தும் பொங்கல் திருநாள் மிகமிக முக்கியமானதொரு பண்டிகையாகிறது.

தமிழர்களின் வாழ்வில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனியொரு இடம் உண்டு. தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்த பொங்கல் நாளில் அனைவரும், அனைத்து துன்பங்களிலிருந்து விடுபட வேண்டும். நாட்டில் அமைதி, வளம், மகிழ்ச்சி செழிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...